இவ்வாண்டு பிப்ரவரி 25ம் நாள், திபெத் புத்தாண்டின் முதல் நாளாகும். விரைவில் வருகின்ற திபெத் புத்தாண்டின் போது, திபெத் சுற்றுலா வளர்ச்சி பெறும் என்று தொழில்முறை பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.
குளிர்காலச் சுற்றுலா சலுகை நடவடிக்கைகளின் மூலம், திபெத்தில் மந்தமான நிலையில் இருந்த சுற்றுலாத் துறை, மீட்சியடையத் துவங்கியது. இவ்வாண்டு ஜனவரி திங்களின் பிற்பகுதி முதல், பிப்ரவரி திங்களின் முற்பகுதி சீனாவின் பாரம்பரிய வசந்த விழா வரையான காலத்தில், திபெத்துக்குச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை, சுமார் 58 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட, 2.2 விழுக்காடு அதிகம்.
எதிர்வரும் திபெத் புத்தாண்டின் போது, மேலதிலமான பயணிகள், திபெத்துக்குச் சென்று பயணம் மேற்கொள்வர் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலாப் பணியகத்தின் துணைத் தலைவர் வாங்சோங்பிங் மதிப்பிட்டார்.
|