திபெத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமான திட்டத்தின் இலக்குகளை நனவாக்க, சீனா, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளின் இறுதி முதல் இதுவரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற்றுள்ளன. ஆனால், உலக வெப்பமேறலால், சில பாதிப்புகள் ஏற்பட்டன. பிப்ரவரி 18ம் நாள், சீன அரசு, 2008 முதல் 2030ம் ஆண்டு வரையான திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
இத்திட்டத்தில், திபெத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கைக் கட்டுமானம், சுற்றுச்சூழல் ஆதரவு மற்றும் உத்தரவாதம் உள்ளிட்ட 10 திட்டப்பணிகள் இடம்பெறுகின்றன என்று இப்பொறுப்பாளர் அறிமுகப்படுத்தினார்.
|