தற்போது திபெத்தில் கூறப்படும் "திபெத் பிரச்சினை" நிலவவில்லை. பொருளாதார சமூக வளர்ச்சியை எவ்வாறு விரைவுபடுத்துவது தான், திபெத் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினையாக உள்ளது. வெளிநாட்டிலுள்ள தலாய்லாமா உள்ளிட்ட சிலர் திபெத் சுதந்திரத்தை நாடும் வகையில், கூறப்படும் "திபெத் பிரச்சினையை" வேண்டுமென்றே உருவாக்கினர். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் THE HINDU ஆங்கில நாளேடின் தலைமைப் பதிப்பாசிரியர் Narasimhan Ram 25ம் நாள் பெய்சிங்கில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, இவ்வாறு கூறினார்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. சமூக வாழ்க்கை இனிமையான சூழ்நிலையைக் கொள்கின்றது. திபெத் இன மக்கள் திபெத் மொழியையும் திபெத் பண்பாட்டையும் கற்றுக் கொள்வது மற்றும் மதம் நம்பிக்கை போன்ற உரிமைகளை அனுபவிக்கின்றனர். சீன அரசு மற்றும் தற்போதைய அமைப்பு முறை திபெத் வளர்ச்சிக்கு பங்காற்றுவதை இவை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன.
இந்திய புகழ் பெற்ற செய்தி ஊடகத்துறை சேர்ந்த திரு Narasimhan Ram சீனாவில் பயணம் மேற்கொள்வது இது 17வது முறையாகும்.
|