11வது சீன தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரின் முதலாவது செய்தியாளர் கூட்டம், 4ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 4 இலட்சம் கோடி யுவான் நிதி ஒதுக்கீடு குறித்து, பரிசீலனை மற்றும் கண்காணிப்பை சீன தேசிய மக்கள் பேரவை மேற்கொள்ளும். மீண்டும் மீண்டும் நடைபெறும் கட்டுமானங்கள், பலன் குறைவான முதலீடுகள் முதலியவை துவக்கத்திலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தின் செய்தித்தொடர்பாளர் லி சௌ சின் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டம், மத்திய அரசின் வரவு செலவு திட்டம் ஆகியவற்றைக் பரிசீலித்து ஒப்புக்கொள்வது, இக்கூட்டத்தின் முக்கிய கடமையாகும்.
|