அரசு ஒதுக்கீட்டுத் திட்டங்களை மக்கள் அறிவது
cri
அரசின் ஒவ்வொரு முக்கிய ஒதுக்கீட்டுத் திட்டங்களையும் பகுத்தாய்ந்து, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இத்திட்டங்கள் பொது மக்களின் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் 4ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரில், பொருளாதாரம் மற்றும் வேளாண் துறை உறுப்பினர்களின் விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பு, தற்போது சீனா எதிர்நோக்கும் மிக கடுமையான இன்னலாகும் என்று அவர் கூறினார். அதனைச் சமாளிக்க, பெரும் அளவிலான அரசு ஒதுக்கீடு மட்டுமல்ல, சமூக நிதியையும் திரட்டி பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
|
|