நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணியை வலுப்படுத்தி, மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையை இலக்கை இரு ஆண்டுகளுக்குள் முடிக்கப் பாடுபட வேண்டும். அதன் மூலம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்கள், வெகுவிரைவில் மேலும் இன்பமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களின் பள்ளிகளுக்கான மறு கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, எரியாற்றல், நீர்வளம் முதலிய அடிப்படை வசதிகளுக்கான மீட்சியையும் தொடர்ந்து தூண்டி வலுப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
|