பொருளாதார அதிகரிப்பு, மக்கள் வாழ்க்கையில் மேம்பாடு, நிதானம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பல்வகை பணிகளையும் முழு மூச்சுடன் செவ்வனே செய்ய வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கூறினார். இன்று பிற்பகல், ச்சியாங் சூ மாநில பிரதிநிதிக் குழு அரசுப் பணியறிக்கையை பரிசீலனை செய்யும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார். வாழ்க்கையின் முன்னேற்றத்தில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். மக்களின் மனங்களை ஒன்றிணைத்தால், அவர்களின் ஆற்றல்களையும் ஒன்றிணைக்கலாம். பொருளாதார வளர்ச்சி இன்னலுக்குள்ளாகும் போது, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துடன் தொடர்பான பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
|