உற்பத்திப் பொருட்களின் தரத்தையும் பாதுகாப்பான உற்பத்தி நிலையையும் பன்முகங்களிலும் உயர்த்த வேண்டும் என்று வென் ச்சியா பாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
முக்கிய தொழிற்துறைகளில் பாதுகாப்பான உற்பத்தி கண்காணிப்பை மென்மேலும் வலுப்படுத்தி, கடுமையான விபத்துகள் நிகழ்வதைத் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும். உணவுகள் மற்றும் மருந்துகளுக்கான சிறப்பு கட்டுப்பாட்டை ஆழமாக்க வேண்டும். சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்கும் அமைப்பு முறையையும், உற்பத்திப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய பொருட்களை திருப்பி பெற கோரும் அமைப்பு முறையையும் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வென் ச்சியா பாவ் வலியுறுத்தினார்.
|