சீன அரசின் சட்ட அமைப்புப்பணியை வலுப்படுத்தி, சட்டமியற்றலின் வெளிப்படைத்தன்மையையும் பொது மக்களின் பங்களிப்பு அளவையும் உயர்த்த வேண்டும். அமைப்பு ரீதியில் நேர்மையான, நாகரிகமான சட்ட நடைமுறையாக்கத்தை தூண்ட வேண்டும் என்று வென் ச்சியா பாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
அரசியல் அமைப்புமுறைச் சீர்திருத்தத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, சோஷியலிச ஜனநாயக அரசியலை வளர்க்க வேண்டும் என்று வென் ச்சியா பாவ் தெரிவித்தார்.
பொது மக்களின் சட்டரீதியான உரிமை நலனை முக்கியமாக சிறப்பாக பேணிக்காக்க வேண்டும். அவர்கள் முன்வைத்த பிரச்சினைகளை வெகுவிரைவில் தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
|