2009ம் ஆண்டு சீன நடுவண் அரசு ஒதுக்கீடப செய்யும் 90 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள பொது நிதி ஒதுக்கீட்டுத் தொகை முக்கியமாக அடிப்படை வேளாண் சாதனங்கள், விவசாயிகளின் வாழ்க்கைத் தரச்சீரமைப்பு, நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்பு உள்ளிட்ட திட்டப் பணிகளில் பயன்படுத்தப்படும்.
சீன நிதி அமைச்சர் சியே சியு ரன் 6ம் நாள் 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தின் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். உத்தரவாதத் தன்மை வாய்ந்த வீட்டுக் கட்டுமானம், கல்வி, மருத்துவ மற்றும் சுகாதாரக் கட்டுமானம், எரியாற்றல் சிக்கனம் மற்றும் பசுங்கூட வாயு வெளியேற்றம், உயிரினச் சுற்றுசூழல் பாதுகாப்பு, இதர முக்கிய அடிப்படை சாதனங்களின் ஆக்கப்பணி முதலியவற்றில் இந்த பொது ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறிப்பிட்டார்.
|