இவ்வாண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மக்களின் வாழ்க்கைக்கான ஒதுக்கீட்டை பெருமளவில் அதிகரித்து, சமூகக் காப்புறுதி அமைப்பு முறையை மேலும் முழுமைப்படுத்தும். இதன் மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 150 கோடி யுவானை எட்டும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இந்த ஒதுக்கீடு சுமார் 1 மடங்கு அதிகரிக்கும்.
2009ம் ஆண்டு, நகரத் தொழிலாளர்களின் மருத்துவ சிகிச்சை காப்புறுதி, முதுமைக் கால காப்புறுதி, நகர குடிமக்களின் மருத்துவ சிகிச்சை காப்புறுதி, மகப்பேறு காப்புறுதி உள்ளிட்ட சமூக காப்புறுதி அமைப்பு முறையில் திபெத் முக்கியமாக நிதியை ஒதுக்கும். மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 72 கோடி யுவானை எட்டும் என்று திபெத் நிதித் துறை அறிவித்தது.
தவிர, இவ்வாண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மிகக் குறைவான வருமானவரையறையை தொடர்ந்து உயர்த்தி, உணவு பொருள், மருந்து உள்ளிட்ட இதர ஆக்கப்பொருட்களுக்கான கண்காணிப்பிலான ஒதுக்கீட்டையும் அதிகரிக்கும்.
|