சர்வதேச நிதி நெருக்கடியின் பின்னணியில், அரசின் முதலீடு தொடர்ந்து விரிவடைந்து, கடன் அதிகரிப்பதுடன், சீன நிதி துறையின் பாதுகாப்புப் பிரச்சினை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது, சீன நிதி துறை பாதுகாப்பாகவுள்ளது. இடர்ப்பாடு ஏதும் இல்லை என்று சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் போது, சீனாவின் 3 மிகப்பெரிய அரசு சார் வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
வங்கிக் கடனில் சீன மத்திய வங்கி கவனம் செலுத்தி வருகின்றது. இதில் இடர்ப்பாடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் சீன மத்திய வங்கியின் துணைத் தலைவருமான Su Ning தெரிவித்தார்.
புதிதாக கூடியுள்ள கடன் அளவு கணிசமாக அதிகரித்த போதிலும், சீன தொழில் மற்றும் வணிக வங்கி, கடன் வினியோக வரையறை மற்றும் இடர்ப்பாடு கட்டுப்பாட்டு அமைப்பு முறையில் ஊன்றி நின்று வருகின்றது என்று தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் சீன தொழில் மற்றும் வணிக வங்கியின் தலைவருமான Yang Kai தெரிவித்தார்.
|