சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரிலான குவாங்தூங் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில், 7ம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஹூசிந்தாவ், கலந்து கொண்டார். சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் போக்கை, சீனாவின் வளர்ச்சியை புதிய கட்டத்திற்கு முன்னேற்றும் போக்காக தூண்ட வேண்டும் என்று ஹூசிந்தாவ் வலியுறுத்தினார்.
இந்த நிதி நெருக்கடி, சீனாவுக்கு கடும் அறைகூவலை ஏற்படுத்தும் அதே வேளையில், வளர்ச்சி வழிமுறையின் மாற்றத்தையும் கட்டமைப்புச் சீர்திருத்தத்தையும் விரைவுபடுத்தும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. நம்பிக்கையை அதிகரித்து, நடுவண் அரசின் நடவடிக்கை மற்றும் ஏற்பாட்டை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, முன்னேற்றப் பாதையிலான இன்னல்களைத் தோற்கடிக்கப் பாடுபட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
|