சிச்சுவான் நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணியில், நகர மற்றும் கிராமப்புறக் குடிமக்களின் உறைவிடம், கல்வி, சுகாதாரம் முதலிய மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மிக முக்கியமானது என்று சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், சிச்சுவான் மாநிலத்தின் நிரந்தர துணைத் தலைவருமான வேய்ஹோங் 8ம் நாள் தெரிவித்தார்.
இவ்வாண்டுக்குள், நகர மற்றும் கிராமப்புறத்திலான நிரந்தர உறைவிடத்துக்கான கட்டுமானத்தையும், 95 விழுக்காட்டு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான கட்டுமானத்தையும் நிறைவேற்ற, நாங்கள் பாடுபடுவோம் என்று வேய்ஹோங் கூறினார்.
இவ்வாண்டின் பிப்ரவரி திங்களின் இறுதி வரை, 94 விழுக்காட்டு உறைவிடங்கள், கட்டியமைக்கத் துவங்கியுள்ளன. தற்போது, நடுவண் அரசுத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 39 மாவட்டங்களில் கட்டியமைக்கத் துவங்கிய பள்ளிகளின் எண்ணிக்கை 1780 ஆகும் என்றும் வேய்ஹோங் அறிமுகப்படுத்தினார்.
|