திபெத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்த ஜனநாயகச் சீர்திருத்தம் உலகில், அடிமைத்தனத்தை ஒழிக்கும் வரலாற்றில் மைல் கல்லாக விளங்குகிறது. உலகின் மனித உரிமை இலட்சியத்துக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் ஆற்றிய மாபெரும் பங்கு இதுவாகும். சீனாவின் திபெத் பண்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிச் சங்கத்தின் கௌரவத் தலைவர் ரெல்டி 24ம் நாள், செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட்ட பின், திபெத்தின் இலட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றனர். 2009ம் ஆண்டின் மார்ச் 28ம் நாள், திபெத்தின் இலட்சக்கணக்கன அடிமைகளின் விடுதலைக்கான முதலாவது நினைவு நாளாகும். இந்த விழா, வரலாற்று மற்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. இது மட்டுமல்ல, இந்த விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.
ஜனநாயகச் சீர்திருத்தமும், பண்ணை அடிமை அமைப்புமுறையை ஒழித்ததும், திபெத் மக்களின் வரலாற்று தெரிவாகும் என்றும் ரெல்டி கூறினார்.
|