தலாய் குழுவின் பொய் கூற்று
cri
தலாய் லாமா குழு கூறப்படும் அமைதி மற்றும் அகிம்சையை சாக்குப்போக்காக பயன்படுத்தி, மக்களை ஏமாற்ற முயன்று வருகின்றது என்பதை 25ம் நாள் சீன நாளேடு எனும் ஆங்கில ஏட்டில் வெளியிட்ட கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டியது. வன்முறையை பூசிமெழுகி, பகைமையை தீவிரப்படுத்த தலாய் லாமா பாடுபட்டு வருவதாக அவரது கூற்றும் செயல்பாடும் காட்டுகின்றன. தவிர, ஜனநாயக சீர்திருத்தம் திபெத்துக்குக் கொண்டு வந்த பல்வேறு துறைகளிலான மாபெரும் முன்னேற்றங்களை அவர் புறக்கணித்து, திபெத்தை புவியிலுள்ள நரகமாக வர்ணிக்கிறார். நடைமுறையை தலாய் குழு தெளிவாக அறிந்து கொள்ளவில்லை. இது சீனாவைப் பிளவுப்படுத்துவதில் இன்னும் ஊன்றி நிற்கின்றது என்று கட்டுரை சுட்டிக்காட்டியது.
|
|