தாய்நாட்டின் ஒன்றிணைப்பை பேணிக்காத்து, பிரிவினையை எதிர்ப்பது என்பது, திபெத்தில் வாழும் பல்வேறு இன மக்களின் பொது விருப்பமாகும். சீனத் தேசிய மக்கள பேரவையின் 10வது நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவரும், சீனாவின் திபெத் பண்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிச் சங்கத்தின் கௌரவ தலைவருமான ரெய்தி இவ்வாறு தெரிவித்தார்.
திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன் விழாவை நினைவு கூர்வதென்ற கட்டுரையை, அவர் மக்கள் நாளேட்டில் 26ம் நாள் வெளியிடுவார். நீண்டகாலமாக, கூறப்படும் திபெத் சுதந்திரம் என்ற பிரிவினை நடவடிக்கையில் தலாய் லாமா குழு ஈடுபட்டுள்ளது. திபெத் தன்னாட்சி என்ற பெயரில், திபெத் மக்கள் மீதான முந்தைய ஆட்சியை மீட்க இக்குழு முயற்சித்துள்ளது. திபெத்தின் பரந்த மக்களின் அடிப்படை நலன்களை, இச்சூழ்ச்சி மீறுவதாக, ரெய்தி தெரிவித்தார்.
|