• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 09:22:18    
நிங்ச்சி

cri
தொலைவிலிருந்து பார்க்கும்போது மலை தொடர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. அருகிலிருந்து பார்க்கும் போது, காடுகளால் அடர்ந்ததாக காணப்படுகிறது. அது தான் நிங்ச்சி. தெளிந்த நீரும் பசுமையும் சூழ்ந்த மலைப்பகுதியான நீங்ச்சிக்கு திபெத் மொழியில், சூரியனின் இருக்கை என்று பொருளாகும். நிங்ச்சியின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டராகும். கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைவான உயரம் 152 மீட்டராகும். இப்பகுதி தான், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலேயே கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைவான உயரத்தில் அமைந்த நிங்ச்சியின் பகுதியாகும்.

பாசும் கோ ஏரி (சீன வானொலி நிலையம்)

நிங்ச்சியின் காட்டுப் பகுதி ஆதிகாலம், நன்றாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேராக ஓங்கி வளர்ந்த பழைய சைப்பிரஸ் மரங்கள், இமயமலை தேவதாரு மரங்கள், தாவர புதைப்படிவமான பன்னம் செடிகள், நூற்றுக்கணக்கான விதவிதமான அலிசா மலர்கள். உள்ளிட்ட ஏராளமான தாவரங்களால், இயற்கை அருங்காட்சியகம், இயற்கை மரபணுக்களின் களஞ்சியம் என்ற பெயரை நிங்ச்சி பெற்றுள்ளது.

நிங்ச்சியின் காட்சி (சீன வானொலி நிலையம்)

மனித குலம் இது வரை ஆழம் அறியார யார்லுங் ட்சாங்போ ஆற்றுப்பள்ளத்தாக்கு, நிங்ச்சிக்கு அருகில் இருக்கின்றது. அங்கு, உலகில், மிகப் பெரிய உயர்வுத்தாழ்வான நில அமைப்பும் செழிப்பான தாவரங்கள் மற்றும் காட்டு விலங்குகள் போன்ற இயற்கை மூலவளங்களும் உள்ளன. அதன் ஆதிகால இயற்கைக் காட்சி, தொடர்ந்து நன்றாக பாதுகாக்கப்படுகின்றது.

யார்லுங் டசாங்போ ஆறு (Gettyimages)

பாசும் கோ ஏரி, நிங்ச்சியிலுள்ள அற்புதமான இயற்கைக் காட்சியாகும். பாசும் கோ என்றால் திபெத் மொழியில் பச்சை நிற நீர் என்று பொருள்படுகிறது. அதன் பெயரை போல், பாசும் கோ ஏரி, மாசுபடின்றி தூய்மையாக பச்சை நிறத்தில் இருக்கின்றது. அங்கு, ஊற்றுகள், அருவிகள், ஓடும் நீரால் ஏற்பட்ட பள்ளங்கள் முதலிய பல்வேறு இயற்கைக் காட்சிகளையும் முழுவதும் வெளிப்படாமல் உள்ள பழைய மத சிதிலங்களையும் தொல்பொருட்களையும் காண முடிகிறது. பாசும் கோ ஏரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான சிறந்த பருவகாலம் இலையுதிர்காலமாகும். மிதவெப்ப வெயிலில் ஏரியிருந்து மலைக் குன்றுகளும் வரையான வளாகம் காடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இலையிதிர் காலத்தில், செழுமையும் அமைதியுமான சூழல் பாசும் கோ ஏரியை, படம் எடுக்கும் போது சொர்க்கமாக தோற்றமளிக்க செய்கிறது.