
சீனாவில் இதுவரை ஒப்பிட முடியாத, மிக பெரிய அளவிலான, தரையிலுள்ள சிதிலங்கள் மிகவும் முழுமையாக உள் பேரரசர் கல்லறைக்களில் ஒன்றானது, கிழக்கு பிரமிடு என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயர், சி சியா கல்லறை என்பதாகும். இந்த கல்லறை கூட்டம், 1972ம் ஆண்டில் கண்டறியப்பட்டன. அதற்குப் பிந்திய 30 ஆண்டுகளில், அறிவியலாளர்கள் இங்கே அகழ்வு மேற்கொண்டு, ஆய்வு செய்தனர். அதில், சி சியா வம்சத்தின் மிக அரிய தொல்பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.

இதில், சி சியாவின் கை எழுத்துக்கள், சி சியா மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்ற ஓவியங்கள், பல்வேறு வகை சிற்பங்கள், பல்வேறு காலங்களின் காசுகள் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. இங்குள்ள ஏராளமான வடிவங்களிலான மிக தனிச்சிறப்பு மிக்க கற் சிலைகள், மண் சிலைகள் குறிப்பிடத்தக்கவை. சி சியா பண்பாட்டின் ஆய்வுக்கு, இந்த தொல்பொருட்கள் மதிப்புமிக்க உண்மையான பொருட்களாகும்.

|