• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-29 09:36:33    
அன்னத்தின் ஆசைகளை குருவி அறியுமா

cri
ஏறக்குறைய 2220 ஆண்டுகளுக்கு முன் ச்சின் வம்சக்காலத்தின் போது ச்சென் ஷெங் என்ற ஒரு சாதாரண இளைஞன் வாழ்ந்து வந்தான். வயலில் கூலிக்கு உழைக்கும் ஒரு எளிய விவசாயக்கூலியான அவன் ஒரு நாள் வயலில் உழுதுகொண்டிருந்தான். ஏதோ யோசனையோடு வயலை உழுதுகொண்டிருந்த அவன், திடிரென் உழுதலை நிறுத்திவிட்டு அருகிருந்த குன்றில் ஏதோ யோசனையுடன் நின்றுகொண்டிருந்தான். பின் வயலுக்கு திரும்பிய ச்சென் ஷெங் தன்னோடு வயலில் உழுதுகொண்டிருந்தவர்களை பார்த்து " எதிர்காலத்தில் நம்மில் யாராவது பெயரும் புகழும் பெற்றவர்களானால் மற்றவர்களை அவர் மறந்துவிடக்கூடாது" என்றான். இதைக் கேட்ட அவனது சகாக்கள் அவனை பார்த்து கேலியாய் சிரித்தனர். "நீ ஒரு சாதாரண ஒரு கூலித்தொழிலாளி, நீ எப்படியப்பா பணக்காரனாகவும், புகழ்மிக்கவனாகவும் மாறமுடியும்" என்று அவர்கள் கிண்டலடித்தனர். அதற்கு ச்சென் ஷெங் பெருமுச்சு விட்டபடி, ஹும் அன்னப்பறவையின் ஆசைகளை குருவி அறியுமா என்ன" என்று கூறினான். பின்னாளில் ச்சின் வம்ச ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை முன்னின்று நடத்திய ச்சென் ஷெங், ஒருநாள் அரசனாக முடிசூட்டப்பட்டான்.
பின்னாளில் yan que yan zhi honghu zhi zhi அன்னத்தின் ஆசைகளை குருவி அறியுமா என்ற சொல்லடை, உயரிய குறிக்கோள்களும், உன்னத லட்சியங்களும் கொண்ட மனிதர்களை புரிந்துகொள்ள முடியாத மக்களை குறிப்பிடும்போது பயன்படுத்தப்பட்டது.