வளர்ச்சியில் அரசு
ஷாங்காய் மாநகராட்சி Pudong என்ற இடத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளது. பல உயர்ந்த திறமைசாலிகளையும் குறைந்த வருமானங்களை பெறும் குடிமக்களையும் குடியமர்த்தும் நோக்கத்துடனே இந்த குடியிருப்புகள் வாங்கப்பட்டதாக சொத்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் Pudong அரசு 2 பில்லியன் யுவான் அதாவது 292 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு 37,000 குடியிருப்புகளை கட்டி, அவற்றை சலுகை விலையில் தொழில்முறை திறமைசாலிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்தகைய சலுகை விலையிலான வீடுகளில் குடிபுகுவோர் இரண்டு இலட்சம் யுவான் வரை மறுகுடியிருப்புக்கான ஈட்டுத் தொகை பெறலாம். மேலும் நிரந்த குடியமர்வு, 45 விழுக்காடு செலுத்த வேண்டிய வருமான வரியை 20 முதல் 25 விழுக்காடே கட்ட வேண்டிய சலுகைகள் அனைத்தும் இந்த வீடுகளில் குடியேறுவோருக்கு கிடைக்கும். வளர்ச்சிக்கான இத்தகைய திட்டமிடல் எதிர்கால முன்னேற்றத்திற்கு நிச்சயம் கைகொடுக்கும்.
1 2
|