கட்டுமானம் துவங்கும் இறுதி கால வரம்பு
cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் வெளிநாடுகள் தன்னாக காட்சி அரங்கங்களைக் கட்டியமைக்கத் துவங்கும் இறுதி காலவரம்பாக, ஜூன் திங்கள் 30ம் நாள், தீர்மானிக்கப்பட்டது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவராக ஒருங்கிணைப்பு ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் சுமார் 40 நாடுகள், தங்களாக பொருட்காட்சி அரங்கத்தைக் கட்டியமைக்க முடிவெடுத்தன. ஆனால், இதுவரை, அவற்றில் பாதியளவு நாடுகள் கட்டுமானத்தை துவங்கின. உலகப் பொருட்காட்சியின் ஏற்பாட்டுத் தரப்பு, கட்டுமானத்தை துவங்கவில்லாத நாடுகளுடன் கலந்தாய்வு செய்யும் என்று இப்பொருட்காட்சி செயல்குழுவின் தொடர்புடைய பொறுப்பாளர் தெரிவித்தார்.
|
|