வென்ச்சுவான் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஓராண்டு நினைவு நாளான மே 12ம் நாள், விளையாட்டுத் துறை பிரமுகர்கள் பல்வேறு வடிவங்களில், கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைத்து ஆற்றல்களுடனும் ஒன்றுபட்டு, கூட்டாக முயற்சி மேற்கொண்டு, எதிர்காலத்தில் வாழ்க்கையை மேலும் அருமையாக்கலாம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட முழு நாட்டு மக்களும் அறிய அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அமெரிக்காவிலுள்ள சீன புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் யோ மீன் தொலை ஒளிப்படக்காட்சி மூலம் உரைநிகழ்த்தி, கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்க போவதாக உறுதியளித்துள்ளார். குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற இரு கைகளால் பாதுகாக்கப்படும் செந்நிற இதயம் இடம்பெறும் ஒவியம் ஒன்றை அவரது கையால் வரைந்து கூட்டினார். கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு கனிவான வாழ்த்துகளை வழங்கி, அவர்கள் ஆக்கப்பூர்வமாக வாழ யோ மீன் வாழ்த்தினார்.
110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்ட போட்டியில் சீனாவின் புகழ் பெற்ற வீரர் லீயு சாங் 11ம் நாள் தனது விருப்பத்தை நனவாக்கினார். சிச்சுவான் வென்சுவான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள பெய்சுவான் மாவட்டத்தின் கூய் சீய் வட்டத்து அமைதி விருப்ப துவக்கப்பள்ளிக்கு சென்று, தொண்டர்களின் பிரதிநிதியான லீயு சாங் குழந்தைகளுக்கு விளையாட்டு பற்றிய பாடம் நடத்தினார். தனது பெயரை கொண்ட பல விளையாட்டு பொருட்களையும் இந்த துவக்கப்பள்ளியின் மாணவர்களுக்கு லீயு சாங் வழங்கினார்.
|