• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-14 14:41:30    
சிச்சுவான் சுற்றுலா துறையின் மீட்பு

cri
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாநிலம் எழில் மிக்க சுற்றுலா மூலவளங்களால் புகழ்பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு மே 12ம் நாள் கடும் நிலகடுக்கத்தினால், சிச்சுவானின் சுற்றுலா துறை, பெருமளவில் குறைந்துள்ளது. சுமார் ஓராண்டு கால முயற்சி மூலம், இப்பொழுது, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுற்றுலாத் துறை மறுமலர்ச்சியடைய துவங்கியுள்ளது.
ஜப்பானிய பயணி யொஷி ஒத்தானி, சீனாவில் பல முறை சுற்றுலா பயணம் மேற்கொண்டவர். சிச்சுவான் நிலநடுக்கத்தில் கடுமையாக சீர்குலைக்கப்பட்ட தூசியாங்யன் காட்சி தலத்துக்கு அவர் மீண்டும் சென்றார். அங்கு பாதுகாப்பான சுற்றுலா சூழ்நிலையைப் பார்த்தால் அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:

எனக்கு சீன வரலாறு மிகவும் பிடிக்கும். குழுந்தை பருவலத்திலேயே, சீன வரலாறு பற்றிய நூல்களைப் படித்தேன். இது, என்னுடைய 6வது முறை சீனப்பயணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
துசியாங்யன் நகரத்தின் சுற்றுலா பணியகத்தின் சந்தைப்பிரிவு பொறுப்பாளர் சாங் சூங் செங் அறிமுகப்படுத்துகையில், இப்பொழுது, நாள்தோறும் துசியாங்யன் காட்சி தலத்துக்கு வந்து பார்வையிடும் பயணிகளின் எண்ணிக்கை 6000ஐ எட்டியது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இவ்வாண்டின் முதல் காலாண்டில், பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வருமானமும் 2008ம் ஆண்டின் அதே காலத்தின் நிலையை எட்டின. இவ்வாண்டுக்குள் சுற்றுலாத் துறை, 2007ம் ஆண்டின் நிலைக்கு மீட்பதில் நம்பிக்கைக் கொள்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சுற்றுலாத் துறையை வெகுவிரைவில் மீட்கும் வகையில், நிலநடுக்கத்துக்குப் பின், சிச்சுவான் மாநிலம், பாதிக்கப்பட்ட காட்சித் தலங்களின் வசதிகளையும், அவற்றுக்கு செல்லும் பாதைகளையும் செப்பனிட்டு வருகின்றது. உள்ளூர் சுற்றுலா காட்சித் தலங்கள், போக்குவரத்து முதலிய தகவல்கள் அடங்கிய கையேட்டை, சுற்றுலா வாரியங்கள் தயாரித்து, தங்கு விடுதி, தொடர்வண்டி நிலையம் முதலிய இடங்களி்ல வைத்துள்ளன. ஜெர்மன் பயணி மத்தியாஸ் யாஹ்லிங் எமது செய்தியாளரிடம் பேசுகையில், சில காட்சித் தலங்களில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு எதையும் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
துசியாங்யனைத் தவிர, ஆபா திபெத் மற்றும் சியாங் இன தன்னாட்சி வட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்கைக் காட்சி மண்டலமான சியுசேகோவின் சுற்றுலாச் சந்தை சீராக மீட்கப்பட்டது. இத்தன்னாட்சி வட்டத்தின் துணைத் தலைவர் சியேள யூ சே அறிமுகப்படுத்துகையில், சியுசேகோ இயற்கை காட்சி மண்டலத்தின் அடிப்படை சுற்றுலா வசதிகள் கடுமையாக பாதிக்கப்படவில்லை. ஆனால்,

இக்காட்சி மண்டலத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலை சீர்குலைக்கப்பட்டதால், அதன் சுற்றுலாத் துறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஒரு புறம், வடமேற்கு பகுதியை இணைக்கும் சுற்றுலா வழியை வெகுவிரைவில் உருவாக்க வேண்டும். மறு புறம், பெய்ஜிங், ஷாங்காய், சென்சான், குவாங்சோ ஆகிய பெரிய நகரங்களிலிருந்து சியுசேகோவுக்கு வரும் நேரடி விமான பறத்தல்களைத் திறக்க வேண்டும். அதற்குப் பின், பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது, நாள்தோறும், சியுசேகோ இயற்கை காட்சி மண்டலத்துக்கு சுற்றுலாவாக வரும் பயணிகளின் எண்ணிக்கை 3800ஐ எட்டியது என்று தெரிகிறது.
நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படாத சில அடிப்படை வசதிகளைச் செப்பனிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்போது, பயணிகள் இங்கு சுற்றுலா மேற்கொள்வது பாதுகாப்பானது என்று சியேள யூ சே தெரிவித்தார்.

முழு சமூகம் மற்றும் பல்வேறு துறையினரின் உதவி மற்றும் கவனத்துக்கு நன்றி தெரிவித்து, சுற்றுலா துறை மறுமலச்ச்சியடைவதை விரைவுபடுத்த, மாநிலம் முழுவதும் பல்வேறு காட்சி தலங்கள் கூட்டாக முன்னுரிமை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாப் பணியகம் முன்னொழிந்தது. மே திங்கள் 12ம் நாள் அதாவது நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டு நினைவு நாளில், மாநிலத்தின் அனைத்து காட்சித் தலங்களும் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்க சுற்றுலா பணியகம் வேண்டுகோள் விடுத்தது.