பிங்திங்ஷான் படுகொலை நினைவு மண்டபம், லியாவ் நிங் மாநிலத்தின் ஃபூஷூன் நகரின் தெற்குப் பகுதியில் உள்ளது. இது, இரண்டாவது உலகப் போர் காலத்தில், ஜப்பானிய ஏகாதிபத்தியம், சீன அப்பாவி மக்களை படுகொலை செய்ததை நினைவு கூர்கின்ற சின்னமாக உள்ளது.
1932ம் ஆண்டு பிங்திங்ஷானில் படுகொலை செய்யப்பட்ட உடன்பிறப்புகளை நினைவு கூர்வதற்காக, 1951ம் ஆண்டு மார்ச் திங்கள் ஃபூஷூன் நகர அரசு இங்கு நினைவு மண்டபத்தைக் கட்டியமைத்தது. இங்கு, படுகொலை செய்யப்பட்ட சீன மக்களின் எஞ்சிய உடல் பகுதிகள் வைக்கப்பட்டுள்ளன.
1988ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள், சீன அரசவை, சீன முக்கிய தொல்பொருள் பாதுகாப்புப் இடங்களில் இதை சேர்த்தது. பிங்திங்ஷான் படுகொலை நினைவு மண்டபம், 1973ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட பின், சீன மக்களின் நாட்டுப்பற்று மற்றும் புரட்சிப் பாரம்பரியக் கல்வி பயின்ற முக்கிய இடமாக மாறியுள்ளது.
|