• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-12 10:38:17    
பல விருதுகளை பெற்ற நடிகை Xi Meijuan

cri
சீனாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த நடிகைகளில், Xi Meijuan அம்மையாரே விருதுகளை வெல்லும் சிறப்பு நபராக போற்றப்பட்டார். நாடகத்துக்கான Mei Hua விருது, திரைப்படத்துக்கான Jin Ji விருது, Hua Biao விருது, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான Jin Ying விருது, Fei Tian விருது முதலியவற்றை அவர் வென்றெடுத்துள்ளார். வேறுபட்ட தொழிலில் ஈடுபட்ட வித்தியாசமான குணாதிசயத்தைக் கொண்ட பெண்களின் கதா பாத்திரங்களில் Xi Meijuan தலைசிறந்த முறையில் உயிர்த்துடிப்புடன் நடித்துள்ளார். அவரைப் போன்ற நடிகைகள் மிகக் குறைவு என விமர்சனத் துறையினர் கருதுகின்றனர்.
அண்மையில் Chun Cao என்ற தொலைக்காட்சித் தொடர் சீனாவில் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் வாழும் தாயாக நடிக்கும் Xi Meijuanனின் நடிப்பு தொழில்முறை பிரமுகர்கள் மற்றும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

துவக்கப்பள்ளியில் 3 திங்கள் காலம் மட்டுமே கல்வி பயின்ற கிராமப்புற இளம் பெண் Chun Caoவின் கதையை Chun Cao என்ற தொலைக்காட்சித் தொடர் கூறுகிறது. மன உறுதி கொண்ட Chun Cao தோல்வியால் துவண்டு விடவில்லை. இத்தகைய குணாதிசயம் அவரது வாழ்நாள் முழுதும் தாக்கம் செய்து வருகிறது. அவரது தாயும் அதே போன்ற குணாதிசயத்தைக் கொண்டிருக்கிறார். அவரது தாய் அவரை நேசிக்கிறார். அவர் இன்பமாக வாழ விரும்புகிறார். வேலை இல்லாமல் நேரத்தை வீனாக்கும் இளைஞனை தனது மகள் திருமணம் செய்த போது, அவர் அதை உறுதியாக எதிர்த்தார். மகளுக்கான திருமண விழாவில் கூட அவர் தனது மகளை மன்னிக்கவில்லை. இத்தகைய தாயாக Xi Meijuan நடித்தார். அவர் கூறியதாவது—
"Chun Caoவின் தாய் என்ற பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கிறது. நடிகரின் வாழ்க்கையில் மாறுபட்ட உலகம் ஒன்று இருக்கிறது. ஒரு சாத்தியக்கூறு ஏற்படுகிறது. தொழில்முறை நடிகர் இவ்வாறு தான், பலவித நாயகர்களாக நடிக்கலாம் என கருதுகின்றேன்" என்றார் அவர்.
Chun Caoவின் தாயாக செவ்வனே நடிக்கும் பொருட்டு, Xi Meijuan இதர நடிகர்களுடன் சேர்ந்து கிராமப்புறத்துக்குச் சென்று அங்குள்ள வாழ்க்கையை அனுபவித்து, கிராமப்புற மகளிரின் வாழ்க்கை நிலையைப் பார்த்தார். கோடானு கோடி கிராமப்புற மகளிர் கொண்டுள்ள மன உறுதியையும், தோல்விக்கு அடிப்பணிந்து விடாமல் தங்களுக்குரிய உரிமை மற்றும் நலனை அவர்கள் நாடும் எழுச்சியையும் எண்ணிய அவர் மிக விரைவாக தனது கதா பாத்திரத்தில் நிலையில் நுழைந்து, Chun Caoவின் தாயாக உயிர்த்துடிப்புடன் நடித்தார்.
தற்போதைய வாழ்க்கை மிக அதிக வேகம் கொண்டது. தொலைக்காட்சித் தொடரை எடுக்கும் காலம் மிகவும் குறைவு. இதனால் நடிகர்கள் அன்றாட நாட்களில் அதிகமான அனுபவங்களைச் சேமிக்க வேண்டும் என்று Xi Meijuan கருதுகிறார். அவர் கூறியதாவது—

"இத்தகைய அனுபவச் சேமிப்பு நீண்டகால சேமிப்பாக இருக்கலாம். சமூக வாழ்க்கை பற்றிய நடிகர்களின் கவனமும் நீண்டகாலமாக இருக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால், மூளைக்குள் சேமிக்கப்பட்ட பொருட்கள் வெளியே வரும்" என்றார் அவர்.
ஷாங்காய் நாடகக் கல்லூரியின் நடிப்புத் துறையிலிருந்து பட்டம் பெற்ற Xi Meijuan, 1976ஆம் ஆண்டு ஷாங்காய் Ren Min கலை நாடக கழகத்தில் சேர்ந்து நடிகையாக வேலை செய்தார். கடந்த நூற்றாண்டின் 70, 80ஆம் ஆண்டுகளில் பல நவீன நாடகங்களின் அரங்கேற்றத்தில் அவர் பங்கெடுத்தார். Romeo மற்றும் Juliet, அடங்காத பெண்ணை வழிக்குக் கொணர்வது உள்ளிட்ட William Shakespeareவின் படைப்புகளால் அமைக்கப்பட்ட நவீன நாடகங்கள் அவற்றில் அடங்கும். 5வது சீன நாடகத்துக்கான Mei Hua விருது, பண்பாட்டுத் துறையின் நவீன நாடகத்தை வளர்க்கும் தலைசிறந்த நடிகர் விருது உள்ளிட்ட பல பெரிய விருதுகளை அவர் பெற்றார்.
1990ஆம் ஆண்டுகளிலிருந்து, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் Xi Meijuan நடிக்கத் துவங்கினார். போலியான மகளின் உண்மையான அன்புணர்வு, Jiang Zhuying, நீதிபதி அன்னையார், சிவப்பு carnation பூ முதலிய தொலைக்காட்சித் தொடர்களில் அவர் கதா நாயகியாக நடித்தார். இவையனைத்தும் பார்வையாளரின் மனதில் ஆழப்பந்திந்துள்ளன. Jiang Zhuying என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிவியலாளர் Jiang Zhuyingகின் துணைவியார் Lu Changqinஆக அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
நகராட்சித் தலைவி, பெண் நீதிபதி, பெண் தொழில் முனைவோர், ஆசிரியை முதலிய கதா பாத்திரங்களை Xi Meijuan ஏற்று நடித்துள்ளார். வேறுபட்ட கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க அவர் முயற்சி மேற்கொண்டு தனக்கு தானே சவால் விடுத்து வருகிறார். அவர் கூறியதாவது—
"எத்தகைய கதா பாத்திரத்துக்குப் பொருந்தியதாக அல்லது பொருத்தமற்றதாக இருப்பது, பார்வையாளரின் ஒரு வகை கருத்து ஆகும் என கருதுகின்றேன். சில சமயம் ஒரே நடிகர் நடிக்கும் 2 தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து கண்டு ரசித்த பின், அந்த நடிகர் எந்த பாணியைச் சேர்ந்தவர் என பார்வையாளர்கள் உணரலாம். நடிகராக ஒருவர் தனக்குரிய சில நிலைகளிலிருந்து வெளியேற முடியாது. ஆனால் தொழில்முறை நடிகராக, ஓரளவில் வித்தியாசமான பாத்திரங்களை அவர் உருவாக்கலாம் என கருதுகின்றேன்" என்று Xi Meijuan கூறினார்.

பல ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற Xi Meijuan, அமைதியான தன்னடக்கமான மற்றும் மென்மையான பண்புநலன்களைக் கொண்டிருக்கிறார். புகழுக்கு முக்கியத்துவம் அளிக்காத அவர், ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் வாசிப்பதை விரும்புகிறார். அரசியல் விமர்சனம், இலக்கிய விமர்சனம், நாவல், வாழ்க்கை வரலாறு, கட்டுரை முதலியவற்றை அவர் படிக்கிறார். பல்வகை நூல்களைப் படித்தால் தான் அறிவை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறினார். கலைத் துறையில் ஈடுபட்டால் தனிமையைச் சகித்துக் கொள்ளவும் அமைதியான மனநிலையை நிலைநிறுத்தவும் வேண்டும். ஒரு கதா பாத்திரமாக நடிப்பது மற்றும் நேர்மையாக செயல்படுவது, ஒன்றுக்கு ஒன்று துணை புரிகிறது. உற்சாகமும் சீரான மனநிலையும் கலைக்கு தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, வெறுமையான வீடு என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒரு பாத்திரமாக Xi Meijuan வேலை செய்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது—
"மருத்துவர் என்ற பாத்திரமாக நடிக்கின்றேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை நிலையையும் மகன் மற்றும் மகள்களுடனான உறவையும் வெறுமையான வீடு என்ற தொலைக்காட்சித் தொடர் கூறுகிறது. இது, நகரவாசிகளின் வாழ்க்கை பற்றிய தொலைக்காட்சித் தொடராகவும் சமூக கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையை மையப்படுத்தியதாகவும் அமைகிறது" என்றார் அவர்.