ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தும் எழுத்துமூல தூதாண்மை பத்திரத்தை இது வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அமைப்பு குழு பெற வில்லை. இருந்தாலும் இப்பொருட்காட்சியிலான அமெரிக்க பங்கு மீது அமைப்பு குழு மாபெரும் நம்பிக்கை கொள்கின்றது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சியூ வே 5ம் நாள் சீன வானொலி செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.
இந்தப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட அமெரிக்க அரசு ஒரு குழுவுக்கு அதிகாரம் வழங்கியது. நிதி திரட்டும் நிலைமை சீராக உள்ளது. இதற்கான தலைமை பிரதிநிதியையும் அமெரிக்க அரசு நியமித்தது என்பதையும் நாங்கள் கவனித்துள்ளோம் என்றார் சியூ வே. 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதை அமெரிக்க அரசு ஜுலை முதல் நாள் உறுதிப்படுத்தியது என்று சில செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
தவிரவும் அமெரிக்க பாப்சி நிறுவனம் அண்மையில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியிலுள்ள அமெரிக்க அரங்கு அமைப்பு குழுவிடம் 50 லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கியது என்று தெரியவருகின்றது.
|