உலகப் பொருட்காட்சியின் சுகாரதத்தை உத்தரவாதம் செய்யும் பணியை ஷாங்காய் மாநகரம் பன்முகங்களிலும் மேற்கொண்டு வருகிறது. சுகாராத மற்றும் மருத்துவச் சேவை, நோய் தடுப்பு, உணவுப் பொருட்கள் பாதுகாப்பு முதலிய பணிகள் கண்டிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான சுகாதார உத்தரவாதம் பற்றிய சர்வதேச ஆய்வுக்கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது.
உலகப் பொருட்காட்சிக்கான பார்வையாளர்களுக்கும் இதில் கலந்து கொள்ளும் பணியாளர்களுக்கும், மருத்துவச் சேவை வழங்கி, அவசர சிகிச்சை தேவைப்படும் கடும் நோயாளிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வகையில், பூங்காவில் 5 மருத்துவ நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முழு நகரிலும் 96 மருத்துவச் சேவைக்கான முன்னெச்சரிக்கை குழுக்களுக்கும் ஷாங்காய் பயிற்சி அளித்துள்ளது. தவிர, வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய தொற்று நோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை இணையத்தை ஷாங்காய் உருவாக்கி, உணவுப் பொருட்களை கண்டிப்பான முறையில் பரிசோதனை செய்யும் என்று தெரிய வருகிறது.
|