
2005ம் ஆண்டின் நவம்பர் 5ம் நாள், கும்காங் மலை பிரதேச்தில், தென்-வட கொரியாவில் பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்தித்தனர்
தென்-வட கொரியாவில் பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திப்பது பற்றி, தென்-வடகொரிய செஞ்சிலுவைச் சங்கங்கள் 28ம் நாள் வடகொரியாவின் கும்காங் மலை பிரதேசத்தில் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. தொடர்புடைய சந்திப்பு நடவடிக்கை, இவ்வாண்டின் செப்டம்பர் 26ம் நாள் முதல் அக்டோபர் முதல் நாள் வரை கும்காங் மலை பிரதேசத்தில் நடைபெறும் என்று இரு தரப்பும் அறிவித்தன.
2007ம் ஆண்டின் அக்டோபருக்கு பிறகு, இது இரு தரப்புக்கிடையில் முதல்முறை சந்திப்பாகும்.
உடன்படிக்கையின் படி, பிரிந்து வாழும் குடும்பத்தினரை சேர்ந்த 100பேர் இடம்பெறும் பிரதிநிதிக் குழுவை இரு தரப்பும் முறையே உருவாக்கும். செப்டம்பர் 26முதல் 28ம் நாள் வரை, தென்கொரிய பிரதிநிதிக்குழுவினர் கும்காங் மலை பிரதேசத்துக்குச் சென்று, வடகொரியாவின் 200க்கு அதிகமான உறவினர்களை சந்திப்பர். செப்டம்பர் 29முதல் அக்டோபர் முதல் நாள் வரை, வடகொரிய பிரதிநிதிக் குழுவினர் தென்கொரியாவின் சுமார் 450 உறவினர்களைச் சந்திப்பர். கும்காங் மலை பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திக்கும் வகையில், கடந்த ஆண்டின் ஜுலையில் கட்டிமைக்கப்பட் இடம், இந்த முறையும் சந்திக்கும் இடமாக அமையும்.
|