சின்ச்சியாங்கில் ஒடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்
cri
சீனாவின் சின்ச்சியாங்கில் பயங்கரவாதக் குழு ஒன்று காவற்துறையால் அண்மையில், கைது செய்யப்பட்டது. வெடி குண்டு சாதனங்களை உருவாக்கும் மூலப்பொருட்கள், கருவிகள் ஆகியவை அவ்விடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்நடவடிக்கை பயங்கரவாத தாக்குதல் மேலும் ஏற்படாமல் காலதாமதமின்றி தடுத்துள்ளது. Seyitamut Obul, Tasin Mehmut ஆகியோரை முக்கியமாகக் கொண்ட 6 குற்றவாளிகள் சின்ச்சியாங் காவற்துறையால் கைது செய்யப்பட்டனர். சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சியில் ஜீலை 5 வன்முறைக் குற்றச் சம்பவம் ஏற்பட்ட பிறகு, Aksu நகரில் 20 குண்டுவெடிப்புச் சாதனங்களை இக்குற்றக்குழு உருவாக்கி, பயங்கரச் சீர்குலைவு நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
|
|