• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 14:51:14    
புதிதாக பிறந்த குடியரசு

cri
1949ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது என்று அரசு தலைவர் மாசேதுங் தியன் ஆன் மன் கோபுரத்தில் அறிவித்தார். அப்போது சீன விடுதலைப் படையினர் பெய்ஜிங் நகரத்துக்குள் நுழைந்த காட்சி இவ்வாண்டு 71 வயதாகும் முதியோர் Li Mingcaiயின் நினைவில் இன்னமும் இருக்கிறது.
"சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட நாள் கோலாகலமான நாளாகும். ராணுவ அணி வகுப்பு, ராணுவ நுட்பங்களின் காட்சி ஆகியவை சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் வகையில் நடைபெற்றன" என்று Li Mingcai கூறினார்.
நவ சீனா நிறுவப்படும் முன், சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகள் நில உடைமையாளர்களின் வயல்களை வாடகைக்கு எடுத்து பயிரிடுவதன் மூலம் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. அவர்களது பெரும்பாலான அறுவடையை நில உடைமையாளருக்கு சமர்பிக்க வேண்டும். Li Mingcaiயின் குடும்பமும் இப்படித் தான் வாழ்க்கை நடத்தியது.

"அக்காலத்தில் சில வேளைகளில் உண்ண உணவு இருக்காது. என் தந்தை நீண்டகால உழைப்பாளராக தனது முதலாளியிடம் உழைத்தார். அப்போது வீடு இல்லை. பந்தல் ஒன்றை அமைத்து, அமர்ந்த வண்ணம் தூங்கினோம்" என்று அவர் கூறினார்.
நவ சீனா நிறுவப்பட்ட பின், Li Mingcaiயின் குடும்பத்தில் வாழ்க்கையின் நம்பிக்கைச் சுடர் ஏற்றப்பட்டது. 1950ஆம் ஆண்டின் குளிர்காலம் முதல் 1953ஆம் ஆண்டின் வசந்தகாலம் வரை, வரலாற்றில் மிகப் பெருமளவிலான நில உடைமைச் சீர்திருத்தம் சீனாவில் மேற்கொள்ளப்பட்டது. நிலம் இல்லாத அல்லது குறைவான நிலம் கொண்ட 30 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் 4 கோடியே 60 லட்சம் ஹெக்டர் நிலத்தையும் இதர உற்பத்திப் பொருட்களையும் இலவசமாக பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நில உடைமையாளருக்கு வழங்கப்பட வேண்டிய 3500 கோடி கிலோகிராமுக்கு மேற்பட்ட தானியமும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தனது குடும்பத்துக்கு சுமார் 0.3 ஹெக்டர் நிலமும் பெரிய மாடு ஒன்றும் வழங்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் Li Mingcai நினைவு கூர்ந்தார்.
1958ஆம் ஆண்டு, நீர் பாசனம் மற்றும் வெள்ளப்பெருக்கு வெளியேற்றத்துக்காக, அப்போதைய பெய்ஜிங்கின் Huai Rou மாவட்டம் 10 கோடி கன மீட்டர் நீரை சேமிக்கக் கூடிய நீர் தேக்கத்தை நிறுவத் தொடங்கியது. அக்கட்டுமானத்தில் Li Mingcai பங்கெடுத்தார். பெரிய ரக கருவிகள் ஏதும் இல்லாத நிலையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைகளால் தோண்டி, சிறிய வண்டிகளால் 20 லட்சம் கன மீட்டர் கல் மண் மற்றும் கற்காரையை ஏற்றிச் சென்றனர்.

"அப்போது உற்சாகமான சூழழ் நிலவியது. எங்கள் சொந்த ஆற்றலை முழுமையாக பயன்படுத்தினோம். இரவும் பகலும் முழுமூச்சுடன் போராடினோம். கட்டுமான இடத்தில் ஒலிபரப்பு மூலம் எங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது" என்று Li Mingcai கூறினார்.
1954ஆம் ஆண்டு Li Mingcai மற்றும் சகாக்கள் தங்களுக்கு வினியோகிக்கப்பட்ட வயலில் மகிழ்ச்சியுடன் உழைத்த போது, பெய்ஜிங் மாநகரில் வாழ்ந்த Lin Li பள்ளியில் சேர்ந்தார்.
Lin Liயின் தாய் அப்போது இருப்புப் பாதை அமைச்சகத்தில் வேலை செய்தார். வூ ஹான் யாங்ச்சி ஆற்றுப் பாலம் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கான வெளிநாட்டுத் தொடர்புப் பணிக்கு அவர் பொறுப்பேற்றார்.

பல்வேறு இன்னல்களைச் சந்தித்த போதிலும், சீன மக்கள் மிகவும் துணிச்சல் மற்றும் மனஉறுதியோடு, உலகின் கவனத்தை ஈர்க்கும் கட்டுமான சாதனைகளை நிறைவேற்றினர். நவ சீனா நிறுவப்படும் முன் சீனாவில் கனரகத் தொழிற்துறை வெற்றிடமாக இருந்தது. முதல் 5 ஆண்டுகால திட்டம் நடைமுறைக்கு வந்த சில ஆண்டுகளுக்குள், கனரகத் தொழிற்துறை நிறுவனங்கள் அடுத்தடுத்து நிறுவப்பட்டன. நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள், பாலங்கள் ஆகியவை சீனாவில் குறுக்கும் நெடுக்குமாக காணப்பட்டன. நவ சீனாவின் முதல் வாகனம், முதல் விமானம் முதல் யாங்ச்சி ஆற்று பாலம் உள்ளிட்ட ஒவ்வொரு முன்னேற்ற அடியும், அப்போது சீன மக்களுக்கு ஊக்கத்தையும் பெருமையையும் தந்துள்ளது.