• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-19 16:52:19    
சீனாவின் தற்சார்பு வேலை வாய்ப்பு வழிமுறை

cri

மக்கள் அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வேலை வாய்ப்பாகும். சீன இளைஞர்களின் வேலை வாய்ப்பு வழிமுறையை பார்க்கும் போது, 1978ம் ஆண்டு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், சீன அரசு பங்கீட்டு வழிமுறையை மேற்கொண்டது. அதன் பின், சீன சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடனும், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புடனும், சீன மக்களின் வேலை வாய்ப்பு வழிமுறை தற்சார்புத் தெரிவில் நுழைந்தது. தற்போது, தங்களது விருப்பத்திற்கேற்ப, பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார்கள் தங்களது பணியை தேர்ந்தெடுக்கலாம்.
பெய்சிங் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் Feng Fan அம்மையார், கடந்த 20 ஆண்டுகளாக, மாணவர் வேலை வாய்ப்புப் பணியில் பங்காற்றி வருகின்றனர். கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளில், சீன அரசு உடைமை தொழில் நிறுவனங்களில் மாணவர்கள் பங்கீட்டு வழிமுறையில் பணியமர்த்தப்பட்டனர். வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்தை எதிர்நோக்காத போதிலும், பணிகளை தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்கள் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
கடந்த நூற்றாண்டின் 70, 80ம் ஆண்டுகளில், நாடு வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைப்பான வழிமுறை பங்கீடு செய்தது. நாட்டின் தேவைக்கேற்ப, பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றோர் பணியமர்த்தப்பட்டனர் என்று அவர் கூறினார்.


கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டின் இறுதியில், சீனா சந்தை பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொண்டதுடன், பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு வழிமுறை மாபெரும் மாற்றத்தை கண்டது. தங்களது விருப்பத்தின் படி, பட்டதாரிகள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடிந்தது. தற்சார்பு வேலை வாய்ப்புக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தியதற்கு பிந்தைய முதலாவது தொகுதி பட்டதாரிகளில் ஒருவரான 34 வயதான Liu Li சீனாவின் ஷான்துங் மாநிலத்தின் யாங் தாய் நகரின் பங்கு பத்திர தரகுர் நிறுவனத்தில் பணி செய்தார். 1998ம் ஆண்டு, சான் சி நிதி மற்றும் பொருளாதார கழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற அவர், தற்சார்பு வேலை வாய்ப்பை எதிர்நோக்கிய போது, குழப்பம் அடைந்தார். அவர் கூறியதாவது:
நான் முதலில் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தேன். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, பணியை முன்முயற்சியுடன் தேடுவது பற்றி யோசிக்கவில்லை. நான் மிகவும் குழப்பினேன் என்று அவர் கூறினார்.
சிரமங்களை எதிர்நோக்குவதில், தமது மன நிலையை Liu Li சரிபடுத்திக் கொண்டார். இந்த வாய்ப்பு தனது வாழ்க்கையின் பொருளை கோடிட்டுக்காட்டலாம் என்று அவர் தகுதினார். அவர் கூறியதாவது:

என்னை பொறுத்த வரை, தற்சார்பு வேலை வாய்ப்பு நல்ல வாய்ப்பாகும். இளைஞர்களுக்கு ஆற்றலும் திறமையும் உண்டு. அவர்கள் தங்களுக்கு பொருத்தமான பணியை தேடலாம் என்று அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தமது சொந்த ஊரான சான்சியை விட்டு, சீனாவின் கடலோர நகரத்துக்கு சென்று, தனது பணிக்கனவை நனவாக்க Liu Li முடிவு செய்தார். அங்கு, தான் விரும்பிய எதிர்காலத்தை சிறப்பான பொருளாதார அடிப்படை வழங்கும் என்று அவர் நம்பினார். தற்சார்பு வேலை வாய்ப்பை கொண்டு, தனது வாழ்க்கையை முழுமையாக மாற்ற விரும்பினார். எனவே, பெய்சிங், ஷாங்காய் முதலிய மாநகரங்களில் வேலை செய்த சக மாணவர்களின் 9 கல்வி மற்றும் பணி அனுபவங்களை Liu Li கேட்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள கடலோர நகரதுக்கு சென்றார்.
தலைசிறந்த அறிவுடன், நேர்முகத் தேர்வில் அவர் வெற்றிபெற்று, சாங் தூங்கில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய சிறப்பியல்பை வெளிப்படுத்தி, தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, 10 ஆண்டுகால வளர்ச்சியின் மூலம், உள்ளூர் பங்கு பத்திர தரடு நிறுவனத்தின் உயர் நிலை மேலாளராக மாறினார். தற்சார்பு வேலை வாய்ப்பு தனது அனுபவங்களை செழிப்பாக்கி, தனது கனவை நனவாக்கியது என்று Liu Li தெரிவித்தார்.
தற்போது, உலகப் பொருளாதார வளர்ச்சியை நிதி நெருக்கடி பாதித்து வருகின்றது. சீனாவின் இளைஞர்கள் வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குகின்றனர். வேலை வாய்ப்பின் இருப்புக்கும் தேவைக்குமிடையிலான முரண்பாடு மிகவும் கடுமையாகியுள்ளது. எனவே, மேலும் கூடுதலான இளைஞர்கள் தற்சார்புப் புத்தாக்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர். வழமையான பணி வழிமுறையை தேடாமல், ஆர்வத்துடன் தங்களது வேலை வாய்ப்பை சொந்தமாக தொழில் செல்வதன் மூலம் நாடி, வாழ்க்கைக்கான கனவை நனவாக்குகின்றனர்.
1983ம் ஆண்டு பிறந்த Li Yuanyuan, பட்டதாரிகள் சேர்ந்து சொந்தமாக உருவாக்கிய தொழில் நிறுவனமான வெய் லாங் சர்வதேச பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். மாதிரி ஐ.நா என்பது, இந்நிறுவனத்தின் பயிற்சிகளில் முக்கிய பகுதியாகும். இப்பயிற்சியில், சீனாவின் நடுநிலை பள்ளி மாணவர்கள், ஐ.நாவை மாதிரியாக கொண்டு, வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த நடுநிலை பள்ளி மாணவர்களுடன், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றை விவாதிக்கின்றனர். அவர்களின் பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வீட்டு வாடகை உள்ளிட்டவற்றில், பல்கலைக்கழகங்கள் உதவிகளை வழங்கியுள்ளன. மிகப் பெரும்பாலான பட்டதாரி மாணவர்கள் போல், தொழில் நிறுவனம் உருவாக்கப்பட்ட துவக்கத்தில், பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கிகின்றனர் என்று Li Yuanyuan தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தொழில் நிறுவனம் உருவாக்கப்பட்ட முதல் 2 ஆண்டுகளில், பல சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கினோம். மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில், எங்களது தகுநிலை மற்றும் ஆற்றல் குறித்து பள்ளிகள் சந்தேகம் தெரிவித்தன. அத்துடன், மாணவரின் பெற்றோர்களும் ஐயம் கொண்டனர் என்று அவர் கூறினார்.
மேலும் அதிகமானோர் மாதிரி ஐ.நா என்ற புதிய பயிற்சியைப் புரிந்துகொள்ளும் வகையில், Li Yuanyuan உள்ளிட்ட இத்தொழில் நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர்கள் பலர், சீனாவின் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று, பரப்புரை செய்கின்றனர். மாணவர்களின் வளர்ச்சிக்கு மாதிரி ஐ.நா முக்கியத்துவம் வாய்ந்தது, மதிப்பு மிக்கது. இந்த யதார்த்த நடவடிக்கைகள் சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் மற்றும் சீனாவிலுள்ள பல தூதரகங்களின் உதவிகளையும் ஆதரவுகளையும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, அவர்களின் ஏற்பாடு மூலம், Yale பல்கலைக்கழகம் நடத்திய மாதிரி ஐ.நா அன்னும் நடவடிக்கையில் சீனாவின் நடுநிலை பள்ளி மாணவர்கள் வெற்றிகரமாக கலந்துகொண்டனர்.