பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, ஆக்கப்பூர்வ ஒட்டுமொத்த பொருளாதார கொள்கைகளைச் சீனாவும் இந்தியாவும் மேற்கொண்டன. இதன் மூலம், பொருளாதாரம் விரைவாக மீட்சியடைந்து, உலகின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவது, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஆகிய இரட்டை அறைகூவல்களை, இரு நாட்டின் நாணயக்கொள்கைகள் எதிர்நோக்குகின்றன. இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற 3வது சீன இந்திய நாணய மாநாட்டில், சீன மக்கள் வங்கியின் துணைத் தலைவர் Ma Delun 10ம் நாள் இதை சுட்டிக்காட்டினார். சீன மற்றும் இந்தியாவின் பொருளாதார நிதிப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பில் இன்னும் உள்ளார்ந்த ஆற்றல் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய நாணயக் கொள்கை எதிர்நோக்கும் அறைகூவல்களை, இந்திய மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் எடுத்துக்கூறினார். இக்கொள்கையின் முக்கிய பணி, நெருக்கடியை நிர்வகிப்பதிலிருந்து மீட்சியை நிர்வகிப்பதாக மாறி வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
|