உலகின் அறிவாற்றலை திரட்டி, நகரின் எதிர்காலத்தை உருவாக்குவது என்ற தலைப்பில், 7வது சீன 2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சர்வதேச கருத்தரங்கு 12ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
தொடரவல்ல வளர்ச்சி கொண்ட நகர நாகரிகம், நகரின் பல்வகைப் பண்பாடுகள், வளரும் உலகப் பொருட்காட்சியின் கண்ணோட்டம் முதலியவை இக்கருத்தரங்கின் மூன்று கருப்பொருட்களாகும். உலகின் முக்கிய பிரச்சினைகள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கும் சர்வதேசச் சமூகத்திற்கும் கொண்டு வருகின்ற அறைகூவல்கள் மற்றும் பாதிப்பில் கவனம் செலுத்தி, இப்பொருட்காட்சியின் அருமையான எதிர்காலத்தை முன்நோக்கி பார்க்க வேண்டும் என்று இக்கருத்தரங்கு பரப்புரை செய்தது.
|