ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, புத்தாக்கத்தைத் தூண்டி நம்பிக்கையை அதிகரித்து கூட்டு வளர்ச்சியை விரைவுப்படுத்தும் தலைசிறந்த மேடையாக அமையும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் கூறினார். 12ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய 7-வது சர்வதேச கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள், சர்வதேச அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தங்களது புத்தாக்கச் சாதனைகளை வெளிப்படுத்தும் மேடையை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வழங்கும். மேலும், பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு மேடையாகவும் இது அமையும் என்றும் வென் ச்சியாபாவ் கூறினார்.
தற்போது உலகம், மாபெரும் வளர்ச்சி மற்றும் புரட்சித் தருணத்தில் இருக்கிறது. திறப்பு, ஒத்துழைப்பு, இரு தரப்பு நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது என்ற கருத்து சர்வதேசச் சமூகத்தில் பொது கருத்தாகியுள்ளது. எனவே, சர்வதேச நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், எரியாற்றல் மற்றும் உணவு பாதுகாப்பு, அணு ஆயுதப் பரவல் உள்ளிட்ட உலகளவிலான அறைகூவல்களைச் சமாளிப்பதில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை செவ்வனே நடத்துவது, உலகின் அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது என்று வென் ச்சியாபாவ் வலியுறுத்தினார்.
|