அடுத்த ஆண்டை, உலகப் பொருட்காட்சி சுற்றுலா ஆண்டாக சீனா நிர்ணயித்துள்ளது. அத்துடன், சீனா, வெளிநாடுகளில், இது பற்றிய சில சுற்றுலா முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீனத் தேசிய சுற்றுலா ஆணையத்தின் வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் Liu Kezhi 18ம் நாள் குன்மிங் நகரில் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீனாவில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 140 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட, இது 9.4 விழுக்காடு அதிகமாகும். வெளிநாடுகளுக்குச் சென்று பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை, 3 கோடியே 50 இலட்சம் ஆகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, இது 1.9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, அடுத்த ஆண்டில் நடைபெறும். அப்போது, 35 இலட்சம் வெளிநாட்டவர் உள்ளிட்ட 7 கோடி பார்வையாளர்கள் இப்பொருட்காட்சியைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற இலக்கை நனவாக்கப் பாடுபடும் என்றும் அவர் கூறினார்.
|