6 தரப்பு பேச்சுவார்த்தை பற்றி செய்தித்தொடர்பாளரின் உரை
cri
கொரியத் தீபகற்ப அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான புதிய சுற்று 6 தரப்பு பேச்சுவார்த்தை வெகு விரைவில் நடைபெறுவதை முன்னேற்றுவிக்க சீனா பாடுபட உள்ளதாக 28ந் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளிநாட்டமைச்சின் செய்தித்தொடர்பாளர் சாங் சியே அம்மையார் தெரிவித்தார்.
செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், பேச்சுவார்த்தை மூலம் சமாதான முறையில் கொரியத் தீபகற்ப அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பல்வேறு நாடுகளின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது. இது, இப்பிரதேச மற்றும் உலகின் சமாதானத்தையும் நிதானப்பாட்டையும் பேணிக்காப்பதற்கு சாதகமானது. தொடர்புடைய தரப்புகளுடன் சீனா ஆக்கப்பூர்வ கலந்தாய்வு நடத்தி, 6 தரப்பு பேச்சுவார்த்தையின் வளர்ச்சி போக்கை முன்னேற்றுவித்து, நிலைநிறுத்துவதற்குப் பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
|
|