சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Cao Gang Chuan பிரான்சு, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, பிரேசில் ஆகிய நான்கு நாடுகளிலான அதிகாரப்பூர்வ நட்பார்ந்த பயணத்தை முடித்துக் கொண்டு, 29ந் நாள் பெய்ஜிங் திரும்பினார்.
பயணத்தின் போது, இந்நாடுகளின் தலைவர்கள், ராணுவ வட்டார தலைவர்கள் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புறவு, சர்வதேச நிலைமை, பிரதேச பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். இந்நாடுகளிலான படைகள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றை Cao Gang Chuan பார்வையிட்டுள்ளார்.
|