சீன வெளிநாட்டமைச்சர் லீ சாவ் சிங் 5ந் நாள் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் போவெலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புறவை மேலும் வளர்ச்சியுறச்செய்வது, பொருளாதாரம், வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு, கொரியத் தீபகற்ப அணு ஆற்றல் பிரச்சினை, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட துறைகளிலான ஒருங்கணைப்பையும், பரஸ்பரம் நலன் தரும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது ஆகியவை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கட்டுக்கோப்புக்குள், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையை எவ்வாறு உரிய முறையில் தீர்ப்பது என்பது பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
|