மத்திய கிழக்கு பிரதேசத்தின் நிலைமையின் மாற்றத்தில் சீனா மிகவும் கவனம் செலுத்துவதாகவும், இசுரேலும் பலஸ்தீனமும் சர்ச்சையை வெகு விரைவில் நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தையை மீட்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் சீன வெளிநாட்டமைச்சர் லீ சாவ் சிங் தெரிவித்தார். பிரதேசத்தின் சமாதானத்தை வெகு விரைவில் நனவாக்குவதற்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்காற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
பயணம் மேற்கொண்டு வரும் இசுரேல் துணை தலைமை அமைச்சரும் வெளிநாட்டமைச்சருமான Shalomஉடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் இதைத் தெரிவித்தார். இசுரேலுடன் இணைந்து, இரு தரப்புறவை இடைவிடாமல் விரிவுபடுத்த சீனா விரும்புவதாகவும் லீ சாவ் சிங் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை Shalom பாராட்டினார். சீனாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளிலான நட்பார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இசுரேல் அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
|