ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றி செய்தித்தொடர்பாளரின் உரை
cri
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கட்டுக்கோப்புக்குள் ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளிநாட்டமைச்சின் செய்தித்தொடர்பாளர் சாங் சியே அம்மையார் உறுதிப்படுத்தினார்.
9ந் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார். சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தில் ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை விவாதிக்கப்பட்டு, அதன் கட்டுக்கோப்புக்குள் இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சீனா கருதுகின்றது. அண்மையில் ஈரானில் பயணம் மேற்கொண்ட போது, சீன வெளிநாட்டமைச்சர் லீ சாவ் சிங் இவ்வாறு தெரிவித்திருப்பதாக சாங் சியே தெரிவித்தார்.
|
|