பதில் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய விடும்பினால், நீங்கள், பல்வேறு நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களுக்குச் சென்று உதவித்தொகை அளிக்கலாம். மேலும், சர்வதேசச் சீன வானொலி இணையதளத்தின் சீன செஞ்சிலுவை சங்க நிதியம், song qingling நிதியம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனைப்படி, உலக நன்கொடை நடவடிக்கைகளில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதற்கு இந்த இணைய பக்கங்களில் உலா வாருங்கள்.
http://english.cri.cn/tools/online/crcf/index.htm http://english.cri.cn/2946/2008/05/15/301@358023.htm
சீன வெளியுறவு அமைச்சக இணையத்தின் செய்திகளுக்கு இணங்க, பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், சீனாவுக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளன. அமெரிக்கா, சௌதி அரேபியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஐ.நாவின் அகதி நிறுவனம், இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, பாகிஸ்தான் முதலியவை, இதில் இடம்பெறுகின்றன. மே திங்கள் 18ம் நாள் வரை, பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் உதவித் தொகை, 24.6 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. ஜப்பான், ரஷியா, சிங்கப்பூர், தென் கொரியா முதலிய நாடுகளின் அரசுகள், சீனாவின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சிறப்பு மீட்புதவி அணிகளை அனுப்பியுள்ளன. அதே வேளையில், 166 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 30க்கு மேலான சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
|