வினா: மே திங்கள் 19ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரையும் மூன்று நாட்கள் நாடு முழுதும் துக்கம் அனுசதுக்கம் நாட்களாகச் சீன அரசவை முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் சிச்சுவான் வென்ச்சவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஆழமான இரங்கல் தெரிவிக்கிறது. நாடுமுழுதும் இரங்கல் செய்வதைப் பற்றிய சீன மக்களின் எண்ணம் என்ன?
விடை: இயற்கைச் சீற்றங்களில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு முழுநாடும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக துக்கம் அனுசரிக்கம் நாட்களை தீர்மானித்தது, சீன மக்கள் குடியரசின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
தேசிய இரங்கல் நாட்களை தீர்மானிப்பது, உயிரிழந்தோர்களுக்கான மதிப்பும் உயிர் தப்பி வாழ்க்கின்றவர்களுக்கான உதவியும் அளிப்பதாகும். உயிரிழந்தோரின் உற்றார் உறவினர்களுக்கு மிக ஆழமான ஆறுதலாகவும், உயிர் தப்பியவர்களுக்கு ஒருவகை ஊக்கமாகவும் இது திகழ்கிறது. நாடு மீதான மக்களின் பொது உணர்வை இது வலுப்படுத்தும், எல்லா தேசிய இனங்களின் நாட்டுப் பற்று உணர்ச்சியையும் இது உயர்த்தும்.
|