துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
நிலநடுக்கத்தில் குடும்பத்தினரை பிரிந்தவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் ஒன்றுசேர, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகள் மூலம், அவர்களுக்கு உதவி செய்யும்?
பதில்:
நிலநடுக்கம் ஏற்பட்ட பின், இலவச அஞ்சல் சேவைகளை சிச்சுவான் மாநிலத்தின் அஞ்சல் வாரியம் வழங்கியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் வெகுவிரைவில் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளலாம் என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் 19ம் நாள் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் உறவினர்களைத் தேடும் வகையில், இலவச சேவைகளை சீன Mobile, Unicom, Telecom ஆகிய தொலைபேசி தொழில் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
இணையத்தில், உறவினர்களைத் தேடும் மேடைகளை சீனாவின் பல்வேறு இணைய தளங்கள் உருவாக்கியுள்ளன. தேடுதல் இணையங்கள் மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள 8 மருத்துவமனைகள் காயமுற்றோரின் பெயர் பட்டியல்களை வெளியிட்டுள்ளன. இணையம் மூலம் மக்கள் தங்களது உறவினர் பற்றிய தகவல்களைத் தேடுகின்றனர்.
|