ஸ்பெயின் நேயர் Cecilia Tancara கேள்வி: நிலநடுக்கத்தால் அனாதையாக்கப்பட்ட குழைந்தை ஒன்றை நான் தத்து எடுக்க விரும்புகிறேன். நான் சீனாவின் எந்த வாரியத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்?
cri
பதில்: பல வெளிநாட்டு குடும்பங்கள், நிலநடுக்கத்திலான அனாதையாக்கப்பட்ட குழைந்தைகளை தத்து எடுக்க விண்ணப்பித்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவர்களது அன்பு மற்றும் ஆதரவுக்கு, சீன பொதுத் துறை அமைச்சகம், நன்றி தெரிவிக்கிறது. தற்போது, அனாதைக் குழந்தைகளை தத்து எடுக்கும் பணி பற்றி இன்னும் பதிவு செய்யத் தொடங்கவில்லை. முதலில் அவர்களது குடும்பத்தினரைத் தேட வேண்டும். கண்டறிய முடியாத நிலையில், அக்குழந்தைகளைச் சட்டத்தின் படி தத்து கொடுக்கத் தொடங்கலாம். அனாதை குழந்தைகளைத் தத்து எடுக்கும் உரிமையை, எந்த நிறுவனத்திற்கும், தனிநபருக்கும், சிச்சுவான் அரசு வழங்கவில்லை. எனவே, பேரிடர் நீக்கப் பணியின் நிலைமை நிதானப்படுத்தப்பட்டு அனாதைக் குழந்தைகளின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான், தத்து கொடுக்கும் பணி தொடங்க முடியும். அக்குழந்தைகளைத் தத்து எடுக்க விரும்புவோர், சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் வெளியிடும் தகவல்களில் கவனம் செலுத்தி, சீன பொதுத் துறை அமைச்சகம் மற்றும் சிச்சுவான் பொதுத் துறை ஆணையத்தின் இணையத்தளத்தை காலதாமதமின்றி பார்த்தால் போதிய விபரங்கள் கிடைக்கும்.
|
|