சீனாவில் இவ்வாண்டு குளிர்காலத்தின் போது சார்ஸ் நோயாளி கண்டறியப்பட்டார். சார்ஸ் பரவலுக்கு எலி காரணமாக இருக்கலாம் என ஐயம் எழுந்தது.
எலியின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யவல்ல புதிய கருத்தடை மாத்திரையை சீன அறிவியலாளர் தற்போது தயாரித்துள்ளனர்.
இத்தகைய மாத்திரை-ஒரு கிராம் மாத்திரை 100 எலிகளை மலட்டுத் தன்மைக்குள்ளாக்கி விடும் என்கிறார் மா லின்.
இந்த மாத்திரையைக் கண்டறிந்தவர்களில் இவரும் ஒருவர்.
சார்ஸ் வைரசுக்கும் புனகுப்பூனைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஐயம் எழுந்தது. அதன் பின், இத்தகைய ஐயம் எலி மீது விழுந்தது. எனவே எலி ஒழிப்பு இயக்கம் துவங்கியது. இதற்கு இத்தகைய மாத்திரை உறுதுணை புரியும் எனலாம்.
வழக்கமான எலி மருந்து பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும் இந்த மாத்திரை சிறந்தது என்று கூறப்படுகின்றது. இது மனிதருக்குத் தீங்கு விளைவிக்காது. 1 2
|