மனிதர் மிகவும் அஞ்சக்கூடிய நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும். "நீரிழிவு நோய்"எனும் பெயரும் அதற்கு உண்டு. நமது உடலில் கணையம் எனும் உறுப்பு சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோனின் அளவு குறைய நேரிட்டால் குளுகோஸின் அதாவது சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதுவே நீரிழிவு!அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பது அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் கழிப்பது உடல் சோர்வாக இருப்பது உடம்பில் வியர்வை அதிகரிப்பது இவையெல்லாம் சர்க்கரை நோயின் வருகைக்கு அச்சாரம் ஆகலாம்.
குடும்பத்தில் தாத்தா-பாட்டி என உறவினர் எவருக்கேனும் சர்க்கரை நோய் இருந்திருக்கு மேயானால் நமக்கும் அது வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்ற கருத்து நிலவுகின்றது. சர்க்கரை நோய் தொடர்பாக உலகளாவிய நிலையில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
இதய நோய்களுக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு இருப்பது தான் மனிதரின் அச்சத்திற்குக் காரணமாகின்றது. உடலின் எடை அதிகமாக இருப்போருக்கு சர்க்கரை வியாதிபரம "எதிரி".
சர்க்கரை நோய்க்கு அஞ்சாமல் அதைத் தவிர்க்க என்ன வழி?
1 2
|