இரண்டாவது செட் ஆட்டத்தில், செரீனா, புத்துணர்ச்சி பெற்று, போட்டியாற்றலை வெளிப்படுத்தினார்.
எனுனும், படிப்படியாக முன்னேற, 6-4 என்ற கணக்கில் ஷரபோவா வெற்ற பெற்றார்.
நேர் செட்டில் வெற்றி என்பது, அவருக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாக அமைகிறது. ஆட்டம் முடிவடைந்ததும், வெற்றிக் களிப்பில் குழந்தை போல், புன்னகை அரசி போல் சிரித்தார் ஷரபோவா.
பார்வையாளர் விரிசையில் இருந்த தனது தந்தையை நோக்கி ஓடிச் சென்று, அணைத்துக் கொண்டார்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன்மகனை விம்பிள்டன் நாயகி எனக் கேட்ட தாய் எனும் நிலைவில், தாயுமான தந்தை இருந்தார். என்பதைக் குறிப்பிடவும் வேண்டுமோ?
செரீனா, இன்னும் ஓராண்டுக்கு இந்தப் பரிசை, உங்களிடமிருந்து நான் வைத்துக் கொள்கின்றேன் என்று, வெகுளித்தனமாக காறினார் ஷரபோவா.
ஆக, டென்னிஸ் களத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தவல்ல இளம் நாயகி, ரஷியாவில் இருக்கினார் என்பதை, விம்பிள்டன் புரட்சி உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டது.
திரையில் நிழலாகத் தோன்றும் மன்தை ராசாவை நோக்கி கண்மூடித்தனமாக ஓடாமல், ஷரபோவா போல், இந்தி தமிழக நங்கை ஒருத்தி, வி்பள்டனில் சாதனை படைக்கும் நாள் எந்நாளோ?
இது-கநவாகவே போய்விடும் என்பதும் நம்ககுத் தெரிந்த கதைதான்!
இருந்தாலும்-உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் என்பதால், உயர்வாக நினைப்பதில் தவறில்லை அல்லவா?
1 2 3
|