நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை என்ற போதிலும், ஏற்கனவே 2 புதிய உலக சாதனைகள் சாதிக்கப்பட்டுள்ளன. 12ந் நாள் நடைபெற்ற மகளிருக்கான அம்பு எய்தல் ஆயத்த போட்டியில் தென்கொரிய வீராங்கணை PARK SUNG HYUN 682 புள்ளிகளுடன் உலக சாதனையை புதுப்பித்தார். தென் கொரிய மகளிர் குழு, 2030 புள்ளியுடன் குழு போட்டிக்கான உலக சாதனையை உருவாக்கியுள்ளது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் கால்பந்து போட்டிகள் சில நடைபெற்றன. பி பிரிவில், ஈராக் அணி 4-2 என்ற கோல் கணக்கில் போர்த்தக்கல் அணியைத் தோற்கடித்தது. உருக்குவே அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிய அணியைத் தோற்கடித்தது. கானா அணியும் இத்தாலி அணி தலா இரண்டு கோல் போட்டு ஆடத்தை சமன் செய்தன. டி பிரிவில் கோஸ்டாரிக்கா அணியும் மொராக்கோ அணியும் கோல் போடாமல் போட்டியை சமன் செய்தன. 1 2
|