பள்ளிக்கல்வி மூலம் இவ்வூழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது தவிர அவர்களின் அரசியல் அறிவையும் தொழில் அறிவையும் உயர்த்துவதற்காக, சீன அரசு, பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிறுபான்மை தேசிய இன ஊழியர்களை, பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ள பிரதேசங்களுக்கு பணி புரிய அனுப்புவது, தேசிய இனப்பிரதேசமும், கடலோரப்பிரதேசம் மற்றும் வளர்ச்சியடைந்த பிரதேசமும் ஊழியர்களைப் பரிமாறிக்கொள்வது முதலியவை இந்நடவடிக்கைகளில் அடங்கும்.
சீனாவில், சிறுபான்மை தேசிய இன ஊழியர்களைப் பயிற்றுவிப்பது, நாட்டின் முக்கிய தேசிய இனக்கொள்கையாகும் என்பது மட்டுமல்ல, சட்டம் அதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. சீனாவின் "அரசியல் அமைப்பு சட்டத்திலும்" "தேசிய இன மண்டல தன்னாட்சிச்சட்டத்திலும்" சிறுபான்மை தேசிய இன ஊழியர்கள், பல்வகை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் நிர்வாக வல்லுநர்களுக்கான பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற சிறப்பு விதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, சீன அரசு அதன் பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ளும் போது, சிறுபான்மை தேசிய இன மக்கள், குறிப்பிட்ட விகிதம் வகிக்கின்றனர்.
கடந்த 50 ஆண்டுகால பயிற்சியின் மூலம், சீனாவின் சிறுபான்மை தேசிய இன ஊழியர் அணி, வளர்ந்து வலுவடைந்துள்ளது. தேசிய இனப்பிரதேசத்து பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நிதானத்துக்கும் தலைசிறந்த சாதனை வழங்கியுள்ளனர். 1 2
|